எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கியுள்ள படம் தான் 'தலை முறைகள்'. இது இவர் இயக்கத்தில் வெளிவரும் இருபத்தி இரண்டாவது திரைப்படம். இப் படத்தை சசி குமாரின் கம்பெனி புரொடக்சன் நிறுவனம் தயாரிதுள்ளது. இப் படத் தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பாலு மகேந்திராவே நடித்துள்ளார்.
சென்னை, (டி.என்.எஸ்) பல வருடங்களுக்கு முன்பு பாலும கேந்திரா, இயக்கத்தில் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான கதையின் நேரம் தொடரில், பாலுமகேந்திரா சொல்ல மறந்த கதை ஒன்றை தற்போது 'தலைமுறைகள்' என்ற தலைப்பில் திரைப்படமாக இயக்கியுள்ளார்.
அப்பாவை எதிர்த்துக்கொண்டு கிறிஸ்துவ மதப் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார் சசி. இவரும், இவருடைய மனைவியும் சென்னையில் பெரிய மருத்துவர்களாக இருக்கிறார்கள். திடீரென்று கிராமத்தில் உள்ள சசியின் அப்பாவான பாலுமகேந்திராவுக்கு திடீர் உடல் நிலை சரியில்லாமல் போக, சசி, தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் கிராமத்திற்குப் போகிறார்.

