title

.

முகப்பு

Sunday, August 12, 2012

முன்னேஸ்வரம் மிருகவேள்வி தடுக்கக்கோரும் மனு மீதான வாதப்பிரதிவாதம்


சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவில் மிருகவேள்வியைத் தடுக்கக்கோரும் ஆணைகோர் மனு மீதான வாதப்பிரதிவாதங்களை ஜூலை 27ஆம் திகதி எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீ
திமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு நேற்று புதன்கிழமை நீதியரசர்கள் எஸ்.ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் தீபாலி விஜேசுந்தர முன்னிலையில் எடுக்கப்பட்டது.


ஸ்ரீபோதிராஜ மன்றம்இ ஜாதிக சங்க சம்மேளனம்இ தர்மவிஜய மன்றத் தலைவர் ஒல்கொட் குணசேகரஇ வண. பண்டிரிப்புவே வினீதா தேரோஇ மிருக நலன்புரி நம்பிக்கை நிருவனத் தலைவி இராங்கனி டீ சில்வாஇ அதன் தர்மகர்த்தா விசாக திலகரத்னஇ இலங்கை மிருக பாதுகாப்பு சங்க உதவித் தலைவர் லொறைன் மார்கரைட் பார்தோலொமஸ்இ அதன் செயலாளர் ஷர்மினி தெசிறீ ரட்நாயக்க மற்றும் ஆறு பேர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.


பொலிஸ் மாஅதிபர்இ புத்தளம் பிரதிப் பொலிஸ் மாஅதிபர்இ சிலாபம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிஇ சிலாபம் நகரசபைஇ அதன் தலைவர்இ ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தாக்களான எம். கனகரத்தினம்இ காளிமுத்து சிவபாக்கியசுந்தரம் மற்றும் மஹேந்திர சாமி ஆகியோருடன் அகில இலங்கை இந்து மாமன்றம் மற்றும் சட்டமாஅதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


வரலாற்றுப் புகழ்மிக்க ஸ்ரீ முன்னேஸ்வரம்


இலங்கையின் சரித்திரப் பின்னணியோடு இணைந்து மங்காப்புகழ் பெற்று விளங்கும் சிலாபம் முன்னேஸ்வரம் தேவஸ்தானத்தில் ஆடிமாத உற்சவம் இன்று 28ம் திகதி கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமாகிறது.

இந்நாட்டுக்கு விஜயன் 
வருகை தருவதற்கு முன்பே ஐந்து பெரும் சிவஸ்தலங்கள் இருந்ததாக வரலாற்று நெறியாளரான சேர் போல் பீரிஸ் தெரிவித்துள்ளார். மகா தீர்த்தத்தில் திருக்கேதீஸ்வரமும்இ சாலவத்தை (சிலாபம்) யில் முன்னேஸ்வரமும்இ கோட்டையாற்றில் திருக்கோணேஸ்வரமும்இ கீரிமலையில் நகுலேஸ்வரமும்இ இருந்ததாக தெரிவிக்கும் வரலாற்று நெறியாளர் ஐந்தாவது சிவஸ்தலம் பற்றி தெரிவிக்காது உள்ளார்.

கி.மு. 543ம் ஆண்டு இந்நாட்டுக்கு வருகைத் தந்த விஜயன் இந்நாட்டை முப்பத்தெட்டு வருடங்கள் ஆட்சி புரிந்துள்ளான். இவனது ராஜதானியின் நான்கு வாசல்களிலும் சிறப்புடன் விளங்கிய நான்கு சிவாலயங்களை புனருத்தாரணம் செய்தான் என பழைய இலங்கைச் சரித்திர நூல் (அமெரிக்கன் மிஷன் பதிப்பு) தெரிவிக்கிறது. முன்னேஸ்வரம் ஆலயம் பல்வேறு சிறப்புக்களை கொண்டது.

இதன் தோற்றம் பற்றிய முழுமையான ஆதாரபூர்வமான வரலாற்று நூல் இதுவரை வெளிவரவில்லை. இந்நாட்டின் பழைய சரித்திர சான்றுகளையும்இ பல்வேறு மொழி நூல்களையும் ஆதாரங்களாக தெரிவித்தே வரலாற்றைத் தெரிந்துக் கொள்ள இயலுகின்றது.

4500 ஆண்டுகளுக்கு முன்னர் கடைச் சங்க காலத்தில் தமிழர்கள் முதன்முதலாக இலங்கையில குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர்.

அக்காலத்தில் பாண்டிய அரசனின் கீழ் இலங்கையில் அரசும் இயங்கியுள்ளது. அக்காலத்தில் பாண்டிய மன்னனின் ஆட்சி மிகவும் சிறப்புற்று இருந்தது. பாண்டியனின் ஆட்சி கொடியின் சின்னம் மீன் ஆகும். இவ் ஆலயத்தின் கருவறைக்கும் முன்னே உள்ள மகா மண்டபம் கருங் கல்லினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பாண்டிய மன்னன் காலத்து கோவில் கட்டுமான கட்டட அம்சத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

மகா மண்டபத்தின் மேல் பகுதியும் தனி கருங்கல்லேயாகும். இக் கல்லில் சதுரமாக செதுக்கப்பட்ட பகுதியில் நான்கு மீன்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதனை கொண்டும்இ மகா மண்டபத்தில் உள்ள கல்தூண்களின் ஓவியங்களைக் கொண்டும் பாண்டிய மன்னனின் ஆட்சிக் காலத்தில் இவ் ஆலயம் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

தட்சணக் கைலாச புராணத்திலும்இ சிவபுராணத்து சனத்குமாரசம்ஹிதையில் அலகேஸ்வரமெனவும்இ அறுபத்து நான்கு சக்தி பீடங்களுள் ஒன்றெனவும்இ தெரிவிக்கப்படுவது முன்னேஸ்வர ஆலயமேயாகும். வியாச முனிவரால் அர்ச்சிக்கப்பட்டதும்இ இவ் ஆலயத்தின் பொறுப்பில் நாணயம் (குறட்டுக் காசு) வெளியிடப்பட்ட பெருமைக்குரிய ஆலயமாகும். தொன்று தொட்டு குபேர நாடான இலங்கையில் ஸ்ரீ வடிவாம்பிகை சமேத முன்னைநாத சுவாமிகள் எழுத்தருளியிருக்கும் முன்னேஸ்வர ஆலயத்துக்கே உரியதாகும்.

நீண்டதோர் இதிகாச புராண வரலாற்றுடன் இணையப்பட்டுள்ள இவ் ஆலயத்தின் பெருமைகளை சிங்கள இலக்கிய நூலான கோகில சந்தேஷ்ய வெகுவாக தெரிவித்துள்ளது. இலங்கையின் தென்பகுதியான தெவிநுவரையிலிருந்து வட கரைபகுதியான யாழ்ப்பாணம் வரையிலான ஆலயங்களைப் பற்றி இந்நூல் தெரிவிக்கையில் முன்னேஸ்லரம் பற்றி வெகு பெருமையாக விளக்கியுள்ளது.

இராமாயணத்தின் நாயகனான இராமபிரான் சீதாபிராட்டியைத் தேடி இலங்கை வந்து இராவணனுடன் சம்ஹாரம் செய்தப் போது இராமபிரானை பிரமஹத்தி தோஷம் தொத்திக் கொண்டது. அவன் மீண்டும் புஷ்பவிமானத்தில் பாரத நாட்டிற்கு திரும்புகையில் முன்னேஸ்வரத்தை கடக்கும் போது தோஷம் நீங்கியது. உடனே இராமபிரான் முன்னேஸ்வரம் ஆலயம் சென்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூசைகள் நடத்தி சித்திகளைப் பெற்றார் என தட்சிணகைலாச மகாத்மியம் தெரிவிக்கிறது.

பாரதக் கதையோடு முன்னேஸ்வர ஆலயத்திற்கு எவ்விதத் தொடர்பும் இல்லாவிட்டாலும் வியாசர் முனிவர் முன்னேஸ்வரத்தில் வழிபட்டதாக தட்சிணகைலாசம் தெரிவிக்கின்றது.

1896 சிலாபம் கலவரம்


1896 சிலாபம் கலவரம் இலங்கையின் வடமேல் மாகாணம்இ சிலாபம் நகரில் வாழ்ந்த முஸ்லிம் வியாபாரிகளுக்கும்இ கத்தோலிக்க மீனவர்களுக்குமிடையில் 1896 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரம் ஆகும்.
அப்போது வடமேல் மாகாணத்தில் நிலவிய அரிசித்தட்டுப்பாடு சிலாபம் நகரை அதிகளவில் பாதித்திருந்தது. இதனால் ஏற்பட்ட அரிசி விலை ஏற்றத்திலிருந்து கத்தோலிக்கருக்கும்இ முஸ்லிம் வியாபாரிகளுக்குமிடையில் ஏற்பட்ட சச்சரவு கல
வரம் வரை வளர்ந்தது

.டிசம்பர் 26 1896ல் சிலாபம் நகரவீதிகளில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவ சிங்களவர்களுக்குமிடையில் கைகலப்புக்கள் நடந்தன. சிலாபம் நகரில் இருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் சேதப்படுத்தப்பட்டன. ஒருவரின் தலை உடைக்கப்பட்டதுடன்இ சிலர் காயமடைந்தனர். முஸ்லிம்களை பன்றிகளாகச் சித்தரிக்கும் படங்கள் மதில்களில் ஒட்டப்பட்டன.
கலவரத்தை அடக்குவதற்காக கொழும்புஇ மாறவில போன்ற இடங்களிலிருந்து காவல்படையினர் வரவழைக்கப்பட்டனர். கடைகள் பூட்டப்பட்டன. வர்த்தக நடவடிக்கைகள் ஸ்தம்பிதத்தால் நகரமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். காவல்படையினரின் பாதுகாப்புடன் கடைகளைத் திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கலவரம் தொடரும் என்ற அச்சம் இருந்ததால் சுமார் 6 மாதகாலம் நகரை காவல்படையினரின் காவல் செய்தனர்

இலங்கை: பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிலாபம் மீனவர் தற்கொலை



கடந்த பெப்பிரவரி மாதம் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலாபம் வெல்ல பிரதேச மீனவர்கள் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் முடமாக்கப்பட்ட று. ஜேசுமரி கிங்ஸ்லி பெர்ணான்டோஇ கடந்த 15ம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 40 வயதான அவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்

பிராதான பாலம், மையவாடி புணர் நிர்மாணம்


சிலாபம் ஜயபிம பிரதேசத்தில் உள்ள பொது மையவாடிக்கு செல்லும் பிராதான பாலமானது சேதமடைந்த நிலையில் உள்ளமையினால் மக்கள் அதில் பயணிப்பதில் பெறும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர். மேலும் இப் பொது மைய வாடியி
ல் முஸ்லிம் மக்களுக்கென ஒரு பகுதி இருப்பதனால் அதை வேறுபடுத்தி மதில் அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. இதனால் ஜயபிம முஸ்லிம் மக்கள் ;இ ஜ}ம்மா பள்ளி வாசல் நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கினங்கவும்இ சிலாபம் பிரதேச சபை தலைவர் ஜீவன் ஜுட் இதற்காண புணர் நிர்மாணப்பணியை பொறுப்பேற்றுள்ளார். மேலும் இப் புணர் நிர்மாணப்பணிக்கு 10 இலட்சம் ரூபா நிதி ஒதிக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உகாண்டாவின் சர்வாதிகாரி இடி அமீன்



இடி அமீன் (ஐனi யுஅin னுயனயஇ 1924–ஆகஸ்ட் 16இ 2003) உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர். 1971 முதல் 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார். இவர் பிறந்த ஆண்டு தொடர்பில் சரியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை
. 1924 அல்லது 1925 இல் பிறந்திருக்கலாம்; மே 18இ 1928 இல் பிறந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. இவரது ஆட்சி பற்றிய விபரங்கள் பல பயங்கரமானவை ஆகும். 1979 இல் உகண்டாவை விட்டுத் தப்பியோடி சவுதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். 2003 இல் அங்கேயே இறந்தார்

சிறுவர் துஸ்பிரயோகம்


நாட்டில் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு: 6 மாதங்களில் 700 சிறுவர்கள் மீது பாலியல் வல்லுறவு

இலங்கையில் சிறுவர்கள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாகவும் இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 700 சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

மேலும் குறித்த ஆறு மாத கால பகுதியில் சுமார் 900 பாலியல் வல்லுறவு சம்பவங்கள்
 பதிவாகியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் 1700 துஸ்பிரயோகச் சம்பவங்கள் பதிவானதாகவும் அதில் 1160இ சிறுவர்கள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் துஸ்பிரயோகங்களும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கணினிஇ இணையம்இ தொலைபேசி வளர்ச்சி இந்த பாலியல் வல்லுறவுச் சம்பவங்களுக்கு சில காரணிகளாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்கள் பெரும்பாலும் அவர்களுது நெருங்கிய உறவினர்கள்இ அயலவர்கள்இ தெரிந்தவர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ரமழான் நோன்பின் சிறப்புக்கள்........................


ரமழானில் அல்லாஹ்வுக்காகஇ அவனது கூலியை நாடிஇ உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத
்தின் சிறப்பான "லைலத்துல் கத்ர்" இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரிஇ முஸ்லிம்

நோன்பாளி செய்யக் கூடாதவை
எவன் பொய்யான சொற்களையும்இ தீய நடத்தையையும்இ விடவில்லையோ அவன் உண்ணாமல் பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரி

நீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப் பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது. அவனை யாரேனும் ஏசினால்இ அல்லது அவனுடன் சண்டையிட முற்பட்டால் "நான் நோன்பாளி" என்று கூறி விடவும். நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரிஇ முஸ்லிம்

நோன்பின் தற்காலிக சலுகைகள்
நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப் பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில் அதனை நோற்கவேண்டும். (அல்குர்ஆன்: 2:185)

எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில் (விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில் நோற்கும்படியும்இ அதே காலத்தில் விடுபட்ட தொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்ற கூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது. அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் இருக்கும்போது நோன்பு நோற்க எனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்பு நோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான் கேட்டபோதுஇ நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கிய சலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றானோஇ அது நல்லது தான். நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில் குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்: ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்

நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவை
நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான் கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி) நூல்:அபூதாவூதுஇ திர்மிதீ

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது தாகத்தின் காரணமாகவோஇ அல்லது கடும் வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான் பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி) நூல்:அபூதாவூது

நோன்பு நோற்றிருப்பவர் தான் நோன்பாளி என்பதை மறந்த நிலையில் உண்ணவோ பருகவோ செய்து விட்டால் (நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்) மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும்இ ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும்இ பருகவும் செய்திருக்கின்றான். நபி (ஸல்) அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரிஇ முஸ்லிம்

சஹர் செய்தல்
நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்: அனஸ் (ரழி) புகாரிஇ முஸ்லிம்

ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள் அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும் என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுதுஇநஸ்யீ

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்: அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர் உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில் எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன். அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள் ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது என விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித் (ரழி) நூல்: புகாரீஇமுஸ்லிம்

நோன்பு திறப்பது
அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத்இ இப்னுமாஜ்ஜா

நீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின் மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால் தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்:திர்மிதீஇ அபூதாவூது

டாக்டர் என்.எம். பெரேரா


1970ம் ஆண்டு ஸ்ரீலங்கா- சமசமாஜ பொது உடைமை கட்சிகளின் கூட்டு அரசாங்கத்தில் பல முன்னேற்றகரமான கொள்கைகள் நிறைவேற்றுவதற்கு டாக்டர் என்.எம். பெரேராவும் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது விவசாயிகளின்இதொழிலாளிகளின் வ
ாழ்க்கை தரம் உயர்ந்தமைஇவேலையில்லாப் பிரச்சினை ஓரளவு தீர்க்கப்பட்டமைஇ சிவில் தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் உயர்தப்பட்டமைஇ இலங்கையின் நாணயப்பெறுமதி ஓரளவிற்கென்றாலும் நிலையாக இருந்தமைஇ அதன் காரணமாக பலரது வாழ்க்கை தரம் உயர்ந்தமைஇ தோட்டப் பாடசாலைகள் தேசியமயமாக்கப்பட்டமைஇ உள்ளூர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட்டமைஇ போன்ற பல விடயங்கள் கூட்டரசாங்கத்தில் நடைபெற்றன அதற்கு டாக்டர் என்.எம். பெரேராவும் ஒரு காரண மென்பதை மறுக்க முடியாது.

யாழ் நகரில் அதிகரிகத்து வரும் லொத்தர் நிலையங்களும், அதன் விற்பனையின் போக்கும்...




யாழ்ப்பாணத்தில் அதிகளவான லொத்தர் விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான லொத்தர் நிலையங்கள் நகர்ப்புறங்களிலேயே அதிகளவு பரவி உள்ளன.
யாழ் நகர அதிஷ்ட இலாப சீட்டு விற்பனையின் போக்கு பற்றி விற்பனை முகவர் குறிப்பிடும் போது யாழ் நகரில் 23 அதிர்ஷ்ட இலாப சீட்டு விற்பனை நிலையங்கள் இருப்பதாகவும், ஏனைய மாவட்டங்களைற விட யாழ் மாவட்டத்தில் குறைவான (25வீதம்)  விற்பனையாவதாகவும் தெரிவித்தார். மேலும் அதிஷ்ட இலாபசீட்டானது அதிகளவில் விற்பனையாவதற்கு காரணம்,வறுமையும் மக்களுக்கு அதன் பால் உள்ள விருப்பமுமே என அவர் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் அதிஷ்ட இலாப சீட்டு விற்பனை யாழ் நகரில் குறைவாக இருந்த போதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் பணப்பரிசுகள் கூடுதலாக கிடைத்தமையினால் மக்கள் அதிஷ்ட இலாப சீட்டுகளை வாங்குவதில் அதிக  ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக அதிஷ்ட இலாப சீட்டு விற்பனையில் (60வீதம்) யாழ் மக்களும் (40வீதம்)  வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மக்களும் இராணுவத்தினரும் வாங்குவதாக விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இது பற்றி அவர் குறிப்பிடும் போது வட்டுக்கோட்டையில் 3 கோடி 82 இலட்சம் ரூபாவும், சங்கானையில் 28 இலட்சம் ரூபாவும் கோண்டாவிலில் 10 இலட்சம் ரூபாவும் பரிசாக கிடைத்தமை அதிஷ்ட இலாப சீட்டில் மக்கள் மேலும் அதிகமாக வாங்குவதற்கு ஏதுவாக அமைவதாக அவர் குறிப்பிட்டார்.
அபிவிருத்தி லொத்தர் சபையின் மூலம் கிடைக்கும் இலாபப்பங்கானது ஜனாதிபதி நிதியத்தினூடாக கல்வித்துறைக்கும் ( மஹபொல) உயர்கல்விக்கும் உதவிவழங்குகின்றது. மேலும் இச்சுகாதார துறையினூடாக புற்றுநோய், சிறுநீரகநோயர்களுக்கும் உதவி வழங்கின்றது. அத்துடன் ஊனமுற்ற இராணுவத்தினருக்கும் உதவி வழங்கிவருகிறது. தற்போது யாழ் நகரில் அதிர்ஷ்ட இலாப சீட்டின் விற்பனைப்போக்கானது அதிகரித்துள்ளதோடு மக்களும் அதை வாங்குவதில் அதிக ஆர்வத்தை காட்டுகின்றனர்.

கருகும் மியன்மாரும் காத்திருக்கும் இலங்கையும்




உலக வரை படத்தில் ‘அன்பே அடிப்படை’ என்ற கொள்கையைக் கொண்ட பௌத்த தேசம் என அடையாளப்படுத்தப்பட்ட மியன்மார் (பர்மா)இ இன்று நரமாமிச வேட்டையாடும் அரக்கத்தனத்திற்கு எடுத்துக் காட்டாய் திகழ்கிறது. மேற்கு மியன்மாரின் ராக்கோன் மாநிலத்தில் ஜீவிக்கும் ‘ரோஹிங்கியா முஸ்லிம்கள்’ பெரும்பான்மை இனமாகிய பௌத்தர்களால் முழுமையான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். காவி உடை தரித்த காடையர்களின் தலைமையில்இ இராணுவ – அரசியல் பின்புலத்துடன் கதறக்கதற வெட்டிச் சாய்த்தும்இ சுட்டெரித்தும்இ கற்பழித்தும் கொலை செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் உயிர்களின் எண்ணிக்கை இற்றை வரை 30 000 ஆயிரத்தை அண்மித்துவிட்டது.
சமாதானப் புறாவாக உலகை வலம் வரும் ஜனநாயகவாதி ஆங்சான் சூகிஇ ஆன்மீக வாதியாக அடையாளப்படுத்தப்படும் தலாய்லாமா மற்றும் மனித உரிமைக்காய் குரல் கொடுப்பவர்கள் என்று மார்தட்டும் மேற்குலக வல்லாதிக்க நாடுகள் உள்ளிட்ட எவரும் மியன்மார் கொலைக்களத்தை கண்டித்து இது வரை எதிர் நடவடிக்கைகள் எடுக்காமல் மௌனம் சாதித்தே வருகின்றனர். அமரிக்காவின் எலும்பை உண்டுவிட்டு வாலை ஆட்டித்திரியும் சர்வதேச முஸ்லிம் உம்மத்தின் உறுப்பு நாடுகளான அரபு தேசங்களோ எதுவுமே நடைபெறாதது போன்று சமூக பிரக்ஞையின்றி இருப்பது எமது உம்மத்தின் உணர்வுகள் கூட செத்துவிட்டன என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தினந்தோரும் குருதிச் சொட்டுக்களால் உறைந்து காணப்படும் மியன்மார் அட்டூழியத்தினை இலங்கை தேசத்தின் அரசியல் தலைமைகளாவது கண்டித்து அறிக்கை ஆர்ப்பாட்டங்கள் புரிந்தார்களா என்றால் அதனையும் எங்கும் காணமுடியவில்லை. தன்னினத்தவன் அட்டூழியம் புரிந்தாலும் அது அகிம்சை தான் என்ற இனவாத உணர்வு இன்று நம் மண்ணிலும் ஆழமாய் வேர்விட்டு வளர ஆரம்பித்துள்ளமை நம்மவர்களுக்கான அபாய சமிக்ஞையாகவே கருதவேண்டியுள்ளது.
கருகும் மியன்மாரின் தீப்பொறி இலங்கையையும் கருகச் செய்யுமோ என்று சிந்திக்க வேண்டிய தருணத்தில் இன்று இலங்கை முஸ்லிம்கள் உள்ளனர். தம்புள்ளைஇ குருனாகலஇ தெஹிவலை என்று ஆரம்பித்த முஸ்லிம் விரோதப் போக்கு இன்று பல்பாரிணாமம் பெற்று வியாபித்து வருவது கவலைக்கிடமானதுஇ கண்டிக்கத்தக்கது. தம்பகம மஸ்ஜிதுல் அர்க்கம் ஜூம்ஆ பள்ளிவாசல் முற்றவெளியில் பிரித் ஓதி தொழுகையை இடை நிறுத்துமாறு பிக்குமார்கள் நடாத்திய அராஜகம்இ கொழும்பு – 07 எம்.எச்.எம்.அஷ்ரப் மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலையும் அதனை அண்டிவாழும் குடும்பங்களையும் இடம்பெயரச் செய்து விட்டு அவ்விடத்தில் ரஷ்ய தூதுவராலயத்தின் 4 மாடி கட்டடத்தை நிர்மாணிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைஇ ராஜகிரிய கிரிடா மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் முஸ்லிம்கள் வழமைக்கு மாற்றமாக அதிகமாக வந்ததனை சாட்டாக வைத்து தொழுகையை தடுப்பதற்கு பிக்குமார்கள் ஒன்று திரண்டமைஇ கிண்ணியா பாலத்திற்கு அருகில் முஸ்லிம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வரவேற்பு கோபுர நிர்மாணப்பணிகளை இடைநிறுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளமைஇ திருகோணமலை மாவட்ட அநுராதபுர எல்லைக்கிராமமான ரொட்டவௌ பகுதியில் பரம்பரை பரம்பரையாக செய்து வரப்பட்ட சேனைப் பயிர்ச்செய்கை காணியும் விவசாயக் காணியும் வனவள அதிகாரிகளினால் பரிமுதல் செய்யப்பட்டு வருகின்றமைஇ மன்னார் உப்புக்குளம் முஸ்லிம் மீனவர்களுக்குரிய கோந்தப்பிட்டி துறியனையை விடத்தல் தீவு கிறிஸ்தவ மீனவர்களுக்குரியதாக நீதிபதியினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமைஇ மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் நொச்சிக்குளத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற வந்த போது அவர்களுக்கெதிராய் ஆர்ப்பாட்டம் செய்தமைஇ சன்னாரி பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற வந்த போது அவர்களது காணிகளை கொடுக்காததோடு வேறு இடத்திலும் காணிகளை வழங்கக் கூடாது என்று மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியமைஇ புதுக்குடியிருப்புக்கும் எருக்கலம்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் 200 முஸ்லிம்களுக்கு சொந்தமான 1500 ஏக்கர் காணியினை தனியொரு தமிழருக்கு வழங்கியமைஇ எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பது போல் ‘தம்புள்ளை புனித புமி பிரச்சினைக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தீர்வு கிடைக்காவிட்டால் பாரிய அழிவுகள் ஏற்படும்’ என்று அஸ்கிரிய மகாநாயக்க உடுகம ஸ்ரீபுத்தரக்கித்த தேரர் விடுத்துள்ள மிரட்டல்இ ‘இன்று எமக்குள்ள பிரச்சினை தமிழ் பயங்கரவாதமல்ல! இஸ்லாமிய தீவிரவாதமே! இதற்காக ஆர்ப்பாட்டங்கள் செய்ய வேண்டும்’ என்று இனவாதத்தை கக்கியவண்ணம் களமிறங்கியுள்ள பௌத்த செயல் முன்னணியின் சூடு பரக்கும் அறிக்கைஇ தமிழ் மக்களை முஸ்லிம்களுக்கெதிராய் கிளர்ந்தெழச் செய்யும் விதத்தில் ‘கல்முனைக்குச் செல்லும் தமிழ் பெண்கள் முஸ்லிம் வியாபாரிகளிடம் இலவசமாக பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்கள்… முஸ்லிம்கள் தன்னினப் பெண்களை அடக்குமுறையில் வைத்து விட்டு எமது தமிழ் பெண்கள் மீது சுகம் கொள்கின்றார்கள்’ என்ற வரிகளுடன் மட்டக்களப்பில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் உள்ளிட்ட அண்மைய முன்னெடுப்புகள் யாவும் இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைத்து போpன மற்றும் தமிழ் கிறிஸ்தவ இனவாதிகள் தொடுக்கும் இனவாத தாக்குதலாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
எரியும் மியன்மார் தீச்சுவாலையின் பின்புலத்தில் இருந்து கொண்டு இலங்கை முஸ்லிம்களையும் அவர்களின் இருப்பையும் சேர்த்து கருகச்செய்வதற்கான காய் நகர்த்தல்களாகவே மேற்படி நிகழ்வுகளை எம்மால் நோக்க முடிகிறது. பதவிகளை தக்க வைப்பதற்காய் போராடி சிதறிய செங்கற்கள் துகள்களாய் நாட்புறமும் சிதறிக் காணப்படும் வங்குரோத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளை நம்பி நம் சமுதாயத்தின் இருப்பை ஸ்தீரப்படுத்த நினைப்பது வெறும் பகற்கனவாகவே அமைய முடியும்.
அல்லாஹ்வின் அச்சத்தை உள்ளத்தில் இருத்திஇ கட்சி அரசியலுக்கு அப்பால் நின்றுஇ சமுதாய அக்கறையுடன் களத்தில் இறங்கும் மாற்று சக்திகள் குறித்து முஸ்லிம்கள் 
சிந்திக்க
  வேண்டிய தருணத்தில் இருக்கிறார்கள். சிந்திக்குமா நம் சமுதாயம்???