title

.

முகப்பு

Monday, March 25, 2013

தமிழ் ஆவணப்படத்தின் தோற்றமும் வளர்ச்சிப் போக்கும்.....




ஆவணப்படங்கள் யதார்த்தத்தை பரதிபளிக்கும் ஓர்விடயமாகவே கருதப்படுகிறது. ஆவணப்படங்கள் உளகளாவிய ரீதியில் பல நாடுகளில் பல மொழிகளில் தயாரித்து வெளியிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
                  திரைப்படக்கலை வளரும் போது முதலில் முழு நீளத்திரைப்படங்கள் எடுக்கப்படவில்லை முதலில் நகரும் புகைப்படங்கள், உண்மை நிகழ்வுப்படங்கள், துண்டுப்படங்கள் மோன்றின பின்னரே ஆவணப்படங்கள் முழு நீளத் திரைப்படங்கள் தோன்றின. தழிளர்களால் பல ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டு அவை வெளியுலகிற்கு காட்டப்பட்டது, இதற்கு இந்திய தமிழ் கலைஞர்களே முக்கியபங்கு வகிக்கின்றனர். தஞ்ஞாவுரில் இருந்த மருதப்ப மூப்பனார் என்பவர் புகைப்படக் கலையில் ஏற்பட்ட ஆர்வமும்,
திரைப்பட கமெராவை இயக்க வேண்டும் என்ற ஆசையின் பிரதிபலிப்பால் சென்னையில் விமானம் தரையிரங்கும் காட்சியை படமாக்கினார். 1911 ஆம் ஆண்டு ஜார்ஜின் முடி சூட்ட விழாவை ஆவணப்படமாக்கினார். இந்தியாவில் சென்னையிளும், தஞ்ஞாவுரிளும் அப்படங்களை காடச்சிப்படுத்தியிருந்தார். இவர் தென்னிந்தியாவில் முதல் மௌனப்படம் எடுத்த நடராஜா முதலியாருடன் இணைந்து செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுவே தழிழ் ஆவணப்படத்தின் ஆரம்ப கட்டமாகும். மேற்குறிப்பிட்டவை உண்மை நிலையை படமாக்குதல் என்ற பாணியைச் சார்ந்நவையாகும்.
                     ஆவணப்படத்தின் தன்மை அறிந்து படம் எடுத்தவர் சென்னை சேர்ந்த ஒரு தமிழராவார், ஜோசப் டேவிட் எனும் இவர் இயற்கையோடு தொடர்புபட்ட வகையில் ஆவணப்படங்களை தயாரித்துள்ளார். ஊதாரணமாக தென்னை மரம், புல், பறவை, நெற்பயிர், தொட்டால் சினுங்கி, கீரிப்பில்லை, சிற்பங்கள் போன்றவற்றை படமாக்கியுள்ளார். நெற்பயிரை பற்றிய ஆவணப்படத்தில் நெல்லின் நாற்று, நெல்மணி தோன்றுதல், கதிர் முற்றுதல், அறுவடைக்காலம் வரை அணைத்துக் கட்டங்களையும் சிறந்த முறையில் படமாக்கியுள்ளார். படக்கபட்ச்சிள் அமெரிக்காவுக்கு அனுப்பப்ட்டு அங்கு எடிடிங் செய்யப்பட்டு


திரையரங்குகளில் திரையிடப்படும். போப் பாண்டவரின் தூதுவர்கள் சென்னைக்கு வந்த போது அவர்களுக்கு கத்தோலிக்கர்கள் அழித்த வரவேற்பு, மேளும் பங்களதேஷ் மீனவர்கள் வழிதெரியாமல் சென்னையை வந்தடைந்த நிகழ்வுகளையும் படமாக்கியுள்ளார். இதில் முக்கியமான விடயமாக கருதப்படுவது தான் தயாரித்த படங்களை டேவிட் பார்த்ததில்லை என்பது ஆச்சரியமான விடயமாகும். ஆகவே ஆவணப்படத்தின் வளர்ச்சியில் தமிழரின் பங்கானது மேலோங்கியே காணப்படுகிறுது
. ஆவணப்படத்துறையில் ஆரம்பத்தில் தழிழ் கலைஞர்களின் பணியானது தொடர்ந்த வண்ணமே இருந்தது. ரகுபதி பிரகாசா தென்னிந்தியாவில் முதல் முறையாக திரைப்பட அரங்கை கட்டியவராவார். மேளும் சென்னையில் ' எக்ஸிபிட்டர் பிலிம் சர்வீஸ்' என்ற செய்தி நிறுவனத்தையும் நிறுவியுள்ளார். இவரது ஆவணப்பட வரலாற்றில் ஒரு காங்ரஸ் மாநாட்டை 'இன்டியன் நேசனல் காங்கிரஸ் ஆப் காந்தி' என்ற ஆங்கிளத் தலைப்பில் படமாக்கியுள்ளார். தமிழரின் ஆவணப்பட வரலாற்றில் அரசுக்காகவும், சமூக நலன் கருதியும் பல ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் ஏ. நாராயனண் எனும் தழிழ் கலைஞன் குறிப்பிடத்தக்கவர். பிரசவமும் குழந்தை நலனும், பாலுறவு நோய்கள் போன்ற ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளனர். விவசாயத்தில் வேதியல் உரங்களை பயண்படுத்துவது பற்றியும் சமூக கண்ணோட்டத்தில் இயங்கியுள்ளனர்.


 இந்திய அரசு பிரிட்டிஷ் காலணியாக இருந்ததால் தமிழரினால் எடுக்கப்ட்ட ஆவணப்படங்கள் இவர்களது திரைப்பட ஆவணக்காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். இவை தவிர சர்வதேச அளவில் தமிழ் ஆவணப்பட கலைஞர்களினால் தமிழரின் பாரம்பரியம் பண்பாடு, சமுதாய வாழ்வு, கலை இலக்கியம் போன்ற படங்களையும் ஆங்காங்கே புதைந்து காணப்படுகின்றன. இவற்றை தொகுத்து பாதுகாக்க வேண்டிய கடமை வரலாற்று உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்

0 comments: