Wednesday, September 5, 2012
சிலாபம் நீதவான் மீது மனித மலம் தாக்குதல்
சிலாபம் மேல் நீதி மன்றத்தின் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குற்றவாளி ஒருவர் கூண்டில் இருந்து வெளியே வந்து மனித மலக்கழிவு அடங்கிய பொதியை நீதவான் மீது வீசியுள்ளார். 6 வயது சிறுவன் ஒருவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு கொண்டுவரப்பட்ட போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது . கூண்டுக்கதவை திறந்த போது வெளியே வந்த குறித்த நபர் மேல் நீதிமன்ற நீதவான் மலனி குணரத்ன மீது பொதி ஒன்றை வீசினார். வீசிய பொதி சுவரில் போய் வீழ்ந்தது. பொலிஸாரினால் பொதி சோதனை செய்யப்பட்ட போது அதில் மலக்கழிவு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment